சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கஃபே திரைபடத்தை பார்க்கும் வாய்ப்பு நேற்று கிட்டியது. படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அரசாங்க தடை இல்லாதா போதும், படம் தமிழ்நாட்டில் வெளியாக வில்லை. நம் ஊரில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட முடியாது என்று சொல்லி விட்டதால் தமிழ்நாட்டில் எங்குமே படம் ரீலீஸ் ஆகவில்லை. எந்த ஒரு கலைப்படைப்பையும் முடக்குவது என்னை பொறுத்தவரை தவறான செயல். நம் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை திரைப்படமாக சொல்லலாம், படம் வெளிவந்தவுடன் மக்கள் படத்தை பார்த்துவிட்டு அது நல்லதா கெட்டதா என்று முடிவு செய்யட்டும். வெறும் நான்கு ஐந்து பேர் மட்டும் ஒரு திரைபடத்தை பார்த்து விட்டு, இது எங்கள் உணர்வுகளை பாதிக்கிறது, கண்டிப்பாய் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் அதனால் படத்தை தடை செய் என்று கோருவது மிக பெரிய அயோக்கியதனம். நான்கு அல்லது ஐந்து பேரை எப்படி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரநிதிகள் என்று கூற முடியும். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரநிதிகள் சொன்னாலும் பரவாயில்லை. சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் எப்படி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்? இந்த படத்தை யாரும் பார்க்ககூடாது, அது உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்று சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் குடுத்தார்கள்? நான் தான் எனக்கு எஜமானன், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன், மற்றவர்களுக்கு அதை பற்றி தீர்மானிக்க உரிமை இல்லை. அந்த காரனத்திருக்கு மட்டுமே இந்த திரைபடத்தை நான் பார்த்தேன்.
ஒரு சராசரி சினிமா ரசிகனாய் மெட்ராஸ் கஃபே படம் என்னை பெரிய அளவில் கவரவில்லை, ஆனால் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. இல்லை என்பதை விட எனக்கு அப்படி தோன்றவில்லை. கடைசியாய் இது நேர்மையான் படைப்பா, என்றால் சத்தியமாய் நேர்மை என்பது மருந்திருக்கு கூட இல்லை. படத்தின் பெரிய காமெடியே ராஜீவ்காந்தியை நல்லவர் என்று சொல்வது தான். இந்த ஒரு விஷயத்திருக்கு மட்டுமே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனது. எப்படி "நேரு" என்கிற ப்ளே பாய்யை, காம கொடூரனை இந்திய குழந்தைகளின் மாமா என்று சொல்லி, அவர் பேரில் "குழந்தைகள் தினத்தை" கொண்டாடுவது போல் ஒரு மோசமான சூழ்நிலையை வரலாறு உருவாக்கியதோ, அதே போன்ற ஒரு தவறை இப்பொழுது இந்த படத்தின் முலம் செய்ய முயற்சி மேற்கொள்ள பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி என்கிற அயோக்கியனை, ஊழல் பெருச்சாளியை இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவன், இலங்கையில் அமைதி திரும்ப ஆசை பட்டான் என்று காட்டுவது தான் என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. வரலாற்றை உண்மையா எடுக்க தைரியம் இல்லாதவன் எல்லாம் எதுக்கு படம் எடுக்கிறாங்களோ தெரியவில்லை. வரலாற்றை கொஞ்சம் படித்தவன் கூட சொல்லி விடுவான், இலங்கையில் அமைதி படை என்கிற பெயரில் ராஜீவ் அனுப்பிய படைகள் செய்த அட்டுழியங்களை பற்றி, முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் அமைதி படை செய்த அக்கிரமங்களை எல்லாம் மறைத்து மனசாட்சி இல்லாமல் படம் எடுக்க எப்படி தான் ஜான்க்கு மனம் வந்ததோ, தெரியவில்லை.
இலங்கை உள்நாட்டுப்போர் உச்ச கட்டத்தில் இருந்த "80's பிற்பகுதியில் கதை ஆரம்பிகிறது. ரா உளவு ஏஜென்ட்டாக விக்ரம் சிங் (ஜான் ஆப்ரஹாம்), யாழ்ப்பாணத்தில் பணி அமர்த்த படுகிறார். LTF தலைவர் அண்ணா பாஸ்கரனை (அஜய் ரத்னம்) பிடிக்கும் பொறுப்பை ஏற்றுகொள்கிறார். ஆனால் அவரை நெருங்க கூட முடியவில்லை. பிறகு LTF இரண்டாம் கட்ட தலைவர் மல்லையாவை சந்தித்து பதவி ஆசை காட்டி பாஸ்கரனை காட்டி குடுக்க சொல்கிறார்கள். மல்லையா பதவி ஆசையில் தன் தலைவரை காட்டி குடுத்து விடுகிறான். இந்திய படை பாஸ்கரனை சுத்தி வளைத்து தாக்க, அதில் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி பரவுகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து மீண்டு வந்து தன்னை காட்டி குடுத்து அனைவரையும் கொல்கிறார். இந்திய அமைதி படையும் (!) திரும்ப பெற படுகிறது.
இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தான் ஜெயித்தால் "இலங்கையில் அமைதியை" திரும்ப கொண்டு வருவேன் என்று சபதம் போடுகிறார் Ex-பி.எம். இதை கேட்ட பாஸ்கரன் சீனம் கொண்டு அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் தீட்டப்படும் இடம் சிங்கப்பூரில் இருக்கும் "மெட்ராஸ் கஃபே". ஆக படத்திருக்கு பெயர் கிடைத்து விட்டது. LTF தலைவர்கள் பேசிய பேச்சுகளை ரா அமைப்பு டேப் செய்து டிகோடு செய்து, அந்த திட்டத்தை கண்டு பிடிகிறார்கள். பேச்சை முழுவதும் புரிந்து எந்த நேரத்தில், எந்த இடத்தில் படுகொலை நடைபெறுகிறது என்று கண்டு பிடிக்கும் அதே வேளையில் படுகொலை நடந்து விடுகிறது.
ஜான் ஆப்ரஹாம் நன்றாக நடித்து உள்ளார் என்று சொன்னால் எனக்கு போஜனம் கிடைக்காது. உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது, முகத்தில் கொஞ்சமாவது வேரியேஷன் காட்ட வேண்டாமா. மலச்சிக்கல் வந்து ஆள் போல் முஞ்சியை வைத்து உள்ளார். இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் கூட பரபரப்பே இல்லை, ஏனோ தானோ என்று தான் பல காட்சிகள் செல்கிறது. புலிகள் எத்தனை தைரியசாலி என்பதை உலகம் அறியும். அப்படி பட்ட புலி ஆதரவாளர்களிடம் இவர் உண்மையை வெளி கொண்டு வரும் காட்சிகள் தான் படத்தில் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறது. ஒருவனை பார்த்தவுடன், "ஏய், உண்மையை சொல்லு", என்று இவர் கேட்ப்பார், அவரும் உண்மையை புட்டு புட்டு வைத்து விடுவார். 60 களில் வந்த எம்.ஜி.யார் படங்களில் கூட விசாரணை காட்சிகள் நன்றாக இருந்து இருக்கும்.
இயக்குனர் சூஜித் சிர்கார், தனக்கு மண்டையில் ஒன்றுமே இல்லை என்பதை காட்சிகள் முலம் தெளிவு படுத்தி உள்ளார். இது வரை யாரும் தொடாத கதைக்களம், நல்ல இயக்குனர் கையில் கிடைத்து இருந்தால் பின்னி இருப்பார்கள். அரவேக்காடு தனமாய் வரலாற்றை படித்து விட்டு மூளையை கழற்றி வைத்து விட்டு படத்தை இயக்கினால் இது போன்ற படங்கள் தான் கிடைக்கும். படத்தில் என்னை கவர்ந்த ஒரே எபிசோடு, தாணு என்கிற பெண் புலி ராஜீவை கொலை செய்ய தயார் ஆகும் காட்சிகள் தான். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் அட்டகாசமான் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அந்த பெண். மற்ற படி குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டை போல், இயக்குனர் தன்னையும் சுட்டு கொண்டு படம் பார்க்கும் நம்மளையும் சூடு போடுகிறார். 'நம் பிரதமர் (ராஜீவ் காந்தி) என்ன தப்பு செய்தார்? நாம் ஏன் அவரை இழந்தோம்?’- என்கிற கேள்விகளுடன் படத்தை முடித்து இருப்பார்கள், அதை பார்க்கும் போது, ராஜீவ் முதேவியை அன்றே படுகொலை செய்யாமல் விட்டு இருந்தால், 2007 இனப்படுகொலையை ராஜீவ் 1992 வருடமே நிகழ்த்தி இருப்பான்டா !@#!#$ பசங்களா என்று உரக்க கத்த தோன்றியது.
மெட்ராஸ் கஃபே - அரவேக்காடு அக்ஷன் த்ரில்லர்