Wednesday, November 05, 2014

The World's End (2013) - அடிமைப்படுத்தும் தொழில்நுட்பம்

விஞ்ஞானம் என்பதும், தொழில்நுட்பம் என்பது வேறு. விஞ்ஞானத்தையும் டெக்னால‌ஜி எனப்படும் தொழல்நுட்பத்தையும் பல நேரங்களில் நாம் குழப்பிக் கொள்வதுண்டு. விஞ்ஞானம் மனிதகுலத்துக்கு அவசியமானது. டெக்னால‌ஜி பொரும்பாலும் நம்மை நுகர்வுப் பொருளாக்குவதற்கு பயன்படுத்தப்படுவது. மனிதன் படிப்படியாக டெக்னால‌ஜியின் அடிமையாகி வருகிறான். இந்த அபாயத்துக்கு எதிராக இந்தியாவில் அழுத்தமாக குரல் கொடுத்தவர் காந்தி.

தாராளமயமாக்கலின் நுகர்வு உலகு இந்த உலகின் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கட்டுகிறது. அதாவது standardization செய்கிறது. உலகின் எந்த மூலையில் நீங்கள் வாங்கும் ஒரு அங்குல நட்டும் போல்டும் (சில நாடுகள் தவிர்த்து) உலகம் முழுக்க ஒரே மாதி‌ரியாகதான் இருக்கும் அதனால் எங்கும் அதனை பொருத்த முடியும். பத்தாம் எண் காலணியின் அளவு உலகம் முழுக்க ஒன்றுதான். இப்படி standardization செய்யும் போது அதனை சந்தைப்படுத்துதல் எளிது. அமெரி்க்காவில் தயா‌ரிக்கிற ஒரு பொருளை தென்தமிழகத்தில் ஒரு குக்கிராமம்வரை கொண்டு வந்துவிட முடியும், விற்பனை செய்ய இயலும். 

நெல் அ‌ரிசி சோறு சாப்பிடுகிறவர்களை பீட்சா சாப்பிடுகிறவர்களாக மாற்றினால் இத்தாலியிலோ, அமெரிக்காவிலோ தமிழர்களுக்கான உணவுகளை தயா‌ரிக்க முடியும், தமிழகத்தில் சந்தைப்படுத்த இயலும். பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த standardization ஐ திட்டமிட்டு செயல்படுத்துகின்றன. அவர்களின் பர்கரையும், பீட்சாவையும், கென்டகி சிக்கனையும் - அவைதான் உயர்ந்தது, நாக‌ரிகமானது என்ற மோஸ்தரை உருவாக்குவதன் மூலம் நம்மிடையே சந்தைப்படுத்துகின்றன.


தி வோல்ட்ஸ் என்ட் திரைப்படம் இந்த நெட்வொர்க்கின் ஒழுங்கமைவை நகைச்சுவைப் பின்னணியில் சின்னதாக கோடிட்டு காட்டுகிறது. இந்த இடத்தில் கலை என்றால் என்ன என்பது குறித்தும் பார்க்க வேண்டும். வாழ்வின் சாத்தியக் கூறுகளை அதிகப்படுத்துவது கலையின் ஆதாரமான விஷயம். அது நுகர்வு கலாச்சாரத்தின் ஒழுங்கமைவுக்கு எதிரானது. ஏன் தினம் ஒரே மாதி‌ரியான வேலைகளை செய்ய வேண்டும்? ஒரே மாதி‌ரியான உடைகளை போட வேண்டும்? ஒரே மாதி‌ரியான பழக்க வழக்கங்களை மட்டும் கொண்டாட வேண்டும் என்று கேளிவிகளை எழுப்பக் கூடியது. தாரளமயமாக்கல் அனைத்தைம் சேர்த்துக் கட்டினால் கலை அதனை பி‌ரித்துப் போடுகிறது. தொழில்நுட்ப நெட்வொர்க் அனைத்தையும் standardization செய்கிறது. கலை ஒவ்வொன்றின் தனித்துவத்தை நிலைநிறுத்துகிறது.

தி வேர்ல்ட்ஸ் என்ட் திரைப்படத்தில் இருபது வருடங்களுக்குப் பிறகு சில நண்பர்கள் தங்களின் சொந்த நகரத்தில் ஒன்றிணைகிறார்கள். படிக்கிற காலத்தில் அவர்கள் மேற்கொண்ட pub crawl தோல்வியில் முடிந்திருக்கும். pub crawl என்றால் நகரத்தில் இருக்கும் அடுத்தடுத்த பஃப்களில் தொடர்ச்சியாக ஒரே இரவில் மது அருந்துவது. நண்பர்களின் கணக்கு 12 பஃப்கள். 12 வது வேர்ல்ட்ஸ் என்ட் எனப்படும் பஃப். ஆனால் அவர்களால் அந்த சுற்றை முடிக்க முடியாமல் போய்விடும். அதனை பூர்த்தி செய்யவே இந்த சந்திப்பு.


இந்த தொடர் குடியில் இந்த சந்திப்பை ஒழுங்கு செய்யும் கேரி கிங் நகரத்தில் இருப்பவர்கள் அனைவரும் ரோபோக்கள் என்பதை கண்டு பிடிக்கிறான். மற்ற நண்பர்களும் அதனை அறிந்து கொள்கிறார்கள்.

அசலாக மனிதர்கள் போலவே இருக்கும் ரோபோக்களுடன் சண்டையிட்டு கேரி கிங்கும் நண்பர்களில் ஒருவரான ஆன்டியும் கடைசி பஃப்பான தி வேர்ல்ட்ஸ் என்ட்வரை வந்து விடுகிறார்கள். அங்குதான் இந்த குளறுபடிக்கான காரணத்தை - நாம் மேலே சொன்னதை - அவர்கள் நெட்வொர்க் என்ற குரலின் மூலம் கண்டு கொள்கிறார்கள். போதை அடிமையான கேரி நெட்வொர்க்கில் ஒன்றாக தங்களால் இணைய முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறான். நெட்வொர்க்கின் தோல்வியைத் தொடர்ந்து அந்தப் பகுதியே வெடித்து சிதறிவிடுகிறது.

இயக்குனர் எட்கர் Shaun of the Dead (2004), Hot Fuzz (2007) படங்களைப் பார்த்தவர்களுக்ககு இந்தப் படம் பெரிய ஆச்ச‌ரியமாக இராது. தி வேர்ல்ட்ஸ் என்ட் படம் த்‌ரி ஃப்ளேவர்ஸ் கார்னெட்டோ ட்ரையால‌ஜியின் (Three Flavours Cornetto trilogy) கடைசிப் படம். முதலிரு படங்கள்தான் Shaun of the Dead மற்றும் Hot Fuzz. 


இந்த ட்ரையால‌ஜியில் கார்னெட்டோ ஐஸ்க்‌ரிம் ஏதாவது காட்சியில் இடம்பெறும். முதல் படத்தில் ஸ்ட்ராபெர்‌ரி ஃப்ளேவர் கார்னெட்டோ. இரண்டாவதில் ப்ளூ ஒ‌ரி‌ஜினல் கார்னெட்டோ மூன்றாவதான தி வேர்ல்ட்ஸ் என்டில் பச்சை நிறத்தை குறிக்கும் மின்ட் சாக்லெட் சிப்.

இந்த மூன்று பாகங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்தவர்கள் சைமன் பெக்கும், நிக் ஃப்ரோஸ்டும். மூன்று ட்ரையால‌ஜியில் இரண்டாவது படமான ஹாட் ஃபஸ் திரைப்படமே சிறந்தது. போலீஸ் அதிகா‌ரியான சைமன் பெக் குற்றங்களே நடக்காத இங்கிலாந்தின் கிராமம் ஒன்றுக்கு மாற்றப்படுகிறார். சைமனின் கைது நடவடிக்கையும், குற்றச் செயல்களை கண்டு பிடிக்கும் திறனும் மற்ற போலீஸ் அதிகா‌ரிகளைவிட பல மடங்கு அதிகம். ஒருகட்டத்தில் அவரை கட்டுப்படுத்த முடியாமல்தான் இந்த மாற்றமே.


குற்றமே நடக்காத கிராமத்தில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகளில் பலர் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அவையெல்லாம் திட்டமிட்ட கொலைகள். கொலை செய்கிறவர்களில் முக்கியமானவர்கள் அந்த கிராமத்திலுள்ள கிழங்கட்டைகள். யாராவது போட்டிருக்கும் உடை பிடிக்கவில்லை என்றாலும் கொலைதான். இந்த அபத்த நாடகத்தை சைமன் சக போலீஸ்காரர் நிக் ஃப்ரோஸ்டுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வருவார்.

எட்கர் ரைட் படங்களின் பிரதான அம்சம் ஷார்ப்பான எடிட்டிங் மற்றும் கதை சொல்லும்முறை. இந்த இரண்டும் மூன்று படங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதி‌ரியாக இருந்தாலும் ஹாட் ஃபஸ் பலவகைகளில் மற்ற படங்களை சிறந்தது.

மூன்று படங்களையும் pub crawl மாதி‌ரி ஒரே இரவில் தொடர்ந்து பார்த்தால் ஒரு புதிய அனுபவம் கிடைக்கும்.

நன்றி : வெப்துனியா


Wednesday, September 03, 2014

சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.

கத்தி பிடித்து ஆபரேஷன் செய்யும் மருத்துவர் அதே கத்தியை எடுத்து சமுதாயத்தில் இருக்கும் விஷ கிருமி ஒன்றை வேட்டையாடும் படம் தான் சலீம். ஐடெண்டிட்டி தெப்ட் என்கிற மைய கருவை கொண்டு 2012 ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல பேரையும் வசூலையும் பெற்ற படம் "நான்", அதன் முடிவில் இருந்து சலீமின் தொடர்ச்சியை ஆரம்பம் ஆகிறது. சலீம் (விஜய் ஆண்டனி) நேர்மையாக வாழும் டாக்டர். ஏழைகளுக்கு சாப்பாடு வாங்கி தருவது, புறா வளர்ப்பது, இல்லாதவர்களுக்கு இலவசமாய் வைத்தியம் பார்ப்பது, காசு கம்மியான மருந்துகளை பரிந்துரை செய்வது போன்ற அக்மார்க் தமிழ் சினிமா நல்லவன் கதாபதிரத்தில் வருகிறார்.


 எந்த வம்புக்கும் போக்காமல் அந்நியன் "ரூல்ஸ் ராமானுஜம்" போல் வாழ்கிறார். தன் காதலியிடம் வீண் வம்பு செய்தவனை கூட மன்னிக்கும் அம்பியாய் இருக்கிறார். தன் வீட்டின் முன்பு காரை நிறுத்தி விட்டு எகத்தாளம் பேசும் எதிர்வீட்டு காரனை கூட மன்னித்து விட்டு ஷேர் ஆட்டோவில் வேளைக்கு போகிறார். தவறான ஆபரேஷன் முலம் ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற ஆஃபரை கொண்டு வரும் சீனியர் மருத்துவர் ஒருவரின் கழுத்தில் கத்தியை வைக்கிறார். அது போக தன் காதலி கூப்பிடும் இடத்துக்கு, சரியான நேரத்தில் போக முடியாமல் வேலை வேலை என்று இருந்து விட்டு காதலியிடம் திட்டு வாங்குகிறார். இது போன்ற முதல் பாதியின் காட்சிகளை வைத்தே படம் இரண்டாம் பாதியில் எந்த திசையில் பயணிக்க போகிறது என்று நம்மால் யூகிக்க முடிகிறது.
 
 
 நீங்கள் நினைத்தது போல் படம் இரண்டாம் பாதியில் அக்ஷன் பாதையில் பயணம் செய்கிறது. நேர்மையாய் இருந்த காரணத்திலால் தன் காதலி, வேலை, மரியாதை அனைத்தையும் இழந்து நடு ரோடில் நிர்கதியாய் நிற்கும் சலீம் தான் விரும்பும் வாழ்க்கையை ஒரு நாளாவது வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து விபரீத காரியம் ஒன்றை செய்ய முற்படுகிறார், அதனால் ஏற்படும் விளைவுகள் தன் பிற்பாதி கதை. சாதுவான சலீம் முர்கமாய் மாறும் காட்சி செம அமர்க்களம். அதன் பின்பு சலீம் எடுக்கும் முடிவுகள் எல்லாமே பர பர ரகம் தான். சலீம் ஏன் இப்படி செய்கிறார் என்கிற முடிச்சு மெதுவாய் அவிழும் போது நமக்குள் பரபரப்பு தொற்றி கொள்கிறது.


 எல்லாம் சரி தான், ஆனால் சலீம் "Big Bang" (2007) என்கிற கொரியன் படத்தின் அப்பட்டமான் தழுவல் என்று கடைசி வரை எங்கேயும் குறிப்பிடவில்லை. "Big Bang" படத்தின் ஹீரோ சலீம் போலவே நேர்மை விரும்பி. ஒருநாள் காலையில் அடித்துப் பிடித்து ஆபிஸுக்கு கிளம்புகையில், அவனது  மனைவி அநியாய பொறுமையுடன் எனக்கு ஒன்று வேணும் என்கிறாள். இவன் என்னவென்று கேட்க அவள் பொறுமையாய் டைவர்ஸ் வேண்டும் என்று கேட்கிறாள். ஹீரோ அதிர்ந்து போய், "ஏன் என்னாச்சு? நான் அப்படி என்ன பண்ணுனேன்?" என்று கேட்க அவள் மிக சந்தமாய் "நீ எந்த தப்புமே பண்றதில்லை. வாழ்க்கை போரடிச்சுப் போச்சு" எனக்கு டைவர்ஸ் குடுத்திரு என்று கேட்க. வந்து பேசுகிறேன் என்று ஓடுகிறான் ஹீரோ. அவனது காரை மறித்தபடி ஒரு கார் பார்க் செய்யப்பட்டு இருப்பதை பார்த்து அந்த காரின் சொந்தக்காரனுக்கு போன் செய்தால் அவன் ஊரில் இருந்து கொண்டே வெளியூ‌ரில் இருப்பதாக பதில் சொல்கிறான். அதன் பிறகு ஹீரோ பஸ் பிடித்து வியர்வையில் நினைந்து அலுவலகம் சென்றால், இரண்டு நிமிடங்கள் லேட். ஆபிஸ் மொத்தமும் ஆச்ச‌ரியம். ஹீரோ இதுவரை லேட்டாக வந்ததாய் ச‌ரித்திரம் இல்லை.


அடுத்த நிமிடம் உயரதிகா‌ரி ஹீரோவை அழைத்து ஆட்குறைப்பு நடவடிக்கை, இனி உனக்கு வேலையில்லை என்கிறார். மாலையில் பார்ட்டி தர வேண்டும் என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொத்த ஆபிஸும் அவன் வேலை போனதை முன்னிட்டு கொண்டாடி கூத்தடிக்கிறது. நீ இந்த உலகத்தில் வாழ லாயக்கில்லாதவன் என்கிறான் உயரதிகா‌ரி. உயர் அதிகாரியின் கோல்மால் நடவடிக்கைக்கு துணை போகாததுதான் அவன் வேலை இழக்க காரணம். வாழ்கையே வெறுத்து போகும் ஹீரோ குடித்து விட்டு ரோட்டில் அலைந்து பெட்டி கேஸில் ஒரு போலீஸ்காரரிடம் மாட்டி பிறகு தப்பித்து சமுதாயத்தை திருத்த புறப்படுகிறார். நம்ம சலீம் கூட இதையே தான் செய்கிறார். இரண்டாம் பாதியில் மட்டும் இரு படங்களும் வெவ்வேறு பாதையில் பயணம் செய்கிறது.

 சமுதாயத்தில் நடக்கும் அநியாங்களை கண்டு சலீம் போன்ற படைப்பாளிகள் பொங்குவது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அந்த பொங்கலையும் சொந்தமாக யோசிக்காமல் கொரியனிடம் இருந்து திருடி எடுத்தததை தான் ஏற்று கொள்ள முடியவில்லை. திருடி படம் எடுப்பதை கூட போனால் போகுது என்று விட்டு விடலாம், ஆனால் இந்த திருட்டு படைப்பாளிகள் பேஸ்புக்கில் பேசும் பேச்சு இருக்கிறதே அதை தன் பார்க்க முடியவில்லை. சமிபத்தில் வெளியான் புரட்சிகர மற்றும் வித்தியாசமான திரைக்கதைகளை கொண்ட தமிழ்  படங்கள் எல்லாம் கொரியன் படத்தின் அப்பட்ட தழுவல் தன். மூடர் கூடம் தென் கொரியாவின் Attack the Gas Station (1999 ) , விடியும் முன் London to Brighton (2007), ஜிகிர்தண்டா A Dirty Carnival (2006)  மற்றும் Rough Cut (2008). இந்த படங்கள் தன் தமிழ் சினிமாவை மாற்று பாதையில் அழைத்து செல்கிறது என்று ஜல்லி அடித்து கொண்டு ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது. இது போன்ற திருட்டு படைப்பாளிகளை விட சொந்தமாய் ஸ்கிரிப்ட் ரெடி செய்து படம் எடுக்கும் பேரரசு, டி.ஆர் போன்றவர்கள் எவ்வளவவோ மேல். சலீம்  படத்தைப் பாராட்டியிருக்கும் ஒலக பட இயக்குனர் ராம், இது அறம் சார்ந்து எடுக்கப்பட்டிருக்கும் படம் என்றிருக்கிறார். பிறருடைய கதையை திருடுவதில் என்ன அறம் இருக்கிறது? இன்னொரு கொடுமை படத்தை இயக்கிய நிர்மல் குமார் பத்து வருடங்களுக்கு மேலாக பாரதிராஜாவிடம் வேலை பார்த்தவராம். பத்து வருடங்கள் உழைத்து சொந்தமாய் படம் எடுக்க தெரியாத இந்த இயக்குனரை நினைத்து பரிதாபம் தான் பட முடியும்.

 சலீம் (2014) - கொரியன் தழுவல் த்ரில்லர்.
My Rating : 7.0


Thursday, August 28, 2014

The Call (2013) - சீரியல் சைக்கோ கில்லர்.


ஹாலிவுட் சினிமாக்கள் இரண்டு வகைகளில் முக்கியமானவை. கலாபூர்வமான படங்களை எப்படி எடுக்கக் கூடாது என்பதற்கும், கமர்ஷியல் படங்களை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கும். கலாபூர்வத்துக்கும் தமிழ் சினிமாவுக்கும் பூர்வஜென்ம பிரச்சனை என்பதால் அதை அப்படியே ஒதுக்கிவிட்டு கமர்ஷியலுக்கு வருவோம்.

ஹாலிவுட்காரர்களின் தொழில் அட்சர சுத்தம். லட்சம் ஆணடுகளுக்கு முன் இயற்கை பேரழிவால் இல்லாமல் போன டைனோசர்களை உயிர்ப்பிப்பது போல் எழுபது எம்எம்மில் ஃபிலிம் காட்டினாலும், அந்த டைனோசரை ஒரு கொசு கடிச்சது, கடிச்ச உடனே ஒரு மெழுகில் அகப்பட்டது, டைனோசரின் டிஎன்ஏ யுடன் அது இத்தனை வருசமா கெட்டுப் போகாமல் அப்படியே இருந்திச்சி என்று சயன்டிபிகலாக நம்மை முட்டாளாக்கி படத்தை ரசிக்க வைத்து கரன்சியை உருவிக் கொள்வதில் கில்லாடிகள்.

அப்படிதான் தொலைபேசி என்ற சாதனத்தை வைத்து ஐம்பது படங்களாவது எடுத்திருப்பார்கள். போன் பூத், செல்லுலார் போன்றவை அதில் பிரபலமானவை. இன்னும் என்னென்ன வகையில் இந்த தொலைபேசி என்ற வஸ்துவை காசாக்க முடியும் என்று மூளையை கசக்கிய ரிச்சர்ட் டி ஓவிடியோ எழுதி திரைக்கதை அமைத்த படம்தான் தி கால். தொலைக்காட்சி தொடருக்காக எழுதியதை எழுத்துப் பட்டறையில் தட்டி குறுக்கி 94 நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக்கினார்கள்.   



அமெரிக்காவில் 911 என்ற தொலைபேசி சேவை இருப்பது அமெரிக்கா போகாமல் சென்னை பார்சன் காம்ப்ளக்ஸில் மலிவுவிலை திருட்டு டிவிடி யில் ஹாலிவுட் படம் பார்க்கிறவர்களுக்கும் தெரிந்திருக்கும். ராத்திரி பூனை ஓடுகிற சத்தத்துக்கு பயந்தவர்களும் 911 எண்ணை தட்டி, ஹலோ ஐ யம் இன் ட்ரபிள் என்று சொல்வதை பார்த்திருக்கலாம். எல்லாவித அத்தியாவசியங்களுக்கும் நீங்கள் இந்த 911 எண்ணை பயன்படுத்தலாம். நம்மூர் 108 போல என்று வைத்துக் கொள்ளுங்கள். 108 ல் ஆம்புலன்ஸ் வரும். பதிலாக 911 ல் போலீஸ். 911 ல் பேசுகிற பெண்ணின் குரல் நன்றாக இருக்கே என ஜொள் விடுவதற்காக பேசினால் சட்டப்படி உங்களை உள்ளே தள்ளவும் முடியும்.

911 சேவையில் பணியாற்றும் ஜோர்டன் டர்னருக்கு ஒரு போன்கால் வருகிறது. தன்னுடைய வீட்டிற்குள் மர்ம நபர் நுழைய முயல்வதாக இளம்பெண் ஒருத்தி உயிர் போகிற பதற்றத்தில் பேசுகிறாள். அதை ஜோர்டன் கேட்கும் போதே மர்ம நபர் கண்ணாடியை உடைத்து வீட்டிற்குள் புகுந்து விடுகிறான்.

அடுத்து அதிரடியாக டேக்கன் நீயாம் நீஸனின் அவதாரத்தை எடுக்கும் ஜோர்டன் போனில் அந்த பரிதாபத்துக்குரிய பெண்ணிடம் மாடிக்கு போ, பெட்ரூமுக்குள் புகுந்துக்கோ, கட்டிலுக்கு அடியில் படுத்துக்கோ என்று இன்ஸ்ட்ரக்ஷன் தர, அந்தப் பெண்ணும் அப்படியே செய்கிறாள். உள்ளே புகுந்த மர்ம மனிதன் ஆளைக் காணாமல் அடுத்த நாள் கச்சேரியை வச்சுக்கலாம் என்று கிளம்புகிற நேரம்... ஏதாவது ட்விஸ்ட் வேண்டுமே. போன் தொடர்பு துண்டித்துப் போகிறது. ஜோர்டனின் சமயோஜித புத்தி சட்டென்று மழுங்கிப் போக அந்த பெண்ணின் போனுக்கு தொடர்பு கொள்கிறார். போன் ரிங் சத்தம் கேட்டு திரும்பி வரும் மர்ம மனிதனிடம் அந்தப் பெண் சிக்கிக் கொள்கிறாள். நோ... அந்தப் பெண்ணை எதுவும் செய்யாதே என்று போனில் ஜோர்டன் மர்ம மனிதனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அந்த மர்ம மனிதன் அந்த புகழ்பெற்ற பன்ச் டயலாக்கை சொல்கிறான். It's already done.


 இது போன்ற சீரியல் கில்லர் ஹாரர் படங்களின் சிறப்பம்சம் கில்லர் ஆட்களை எப்படி தேர்வு செய்கிறான் என்பதும், போலீஸ்காரர்கள் எப்படி துப்பறிந்து படிப்படியாக கொலையாளியை நெருங்குகிறார்கள் என்பதும்.  

கொலைக்கான காரணம் பெரும்பாலும் சப்பையாகவே இருக்கும். பூனை கண் காதலி ஏமாத்திட்டா அதுனால சைக்கோ பூனை கண் உள்ள பெண்களா தேடிப்பிடித்து கொன்றான் என்றோ, பத்து மணியானா கில்லரின் மண்டைக்குள் மணியடிக்க ஆரம்பிக்கும், யாரையாவது இழுத்துவச்சு கழுத்தை அறுத்தால்தான் மணிச் சத்தம் அடங்கும் என்றோ கதை அளப்பார்கள். இது மாதிரி ஒரு மயிர் பிளக்கும் பிரச்சனைதான் இந்தப் படத்திலும். சும்மா சொல்லலை. உண்மையிலே மயிருக்கு படத்தில் முக்கிய இடம் இருக்கிறது.

நாம் மேலே பார்த்தது சும்மா படத்தின் ஒரு அறிமுகக் காட்சி. பரிதாபத்துக்குரிய அந்தப் பெண்ணின் சடலம்... 

நான்கு நாட்கள் கழித்து கண்டெடுக்கப்படுகிறது. ஜோர்டன் மூக்கை சிந்தி, தலையை பிடித்து பெண்ணை காப்பாற்ற முடியாத கழிவிரக்கத்தில் நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆறு மாதம் கழித்து அதே கில்லரிடம் இன்னொரு பெண் மாட்டிக் கொள்கிறாள். அந்த பலிகடா பெண் கில்லரின் கார் டிக்கியில் பயணித்தவாறே போனில் 911 க்கு தொடர்பு கொள்கிறாள். போனை அட்டெண்ட் செய்வது ஜோர்டன். மீண்டும் அதே டேக்கன்... அதே நியாம் நீஸன். காரின் பின்பக்க விளக்கை உடை, டிக்கியில் என்னென்ன இருக்கிறது பார்... என்ன பெயிண்ட் டின் இருக்கிறதா? அதை உடைத்து அப்படியே அந்த ஓட்டை வழியாக வெளியே ஊற்று... அந்தப் பெண்ணும் தேம்பி கொண்டே எல்லாம் செய்கிறது.  
 
 
இதற்குப் பிறகு கதையைச் சொன்னால் படத்தைப் பார்க்கிறவர்களுக்கு படத்தின் கொஞ்ச நஞ்ச சுவாரஸியமும் போய்விடும். படத்தில் ஜோர்டனாக நடித்திருப்பவர் ஹலே பெர்ரி. 

தொலைக்காட்சி தொடர்களாக எடுத்துத் தள்ளும் பிராட் ஆண்டர்சன்தான் படத்தின் இயக்குனர். பழக்கதோஷத்தில் இழுக்காமல் 94 நிமிடங்கள் பரபரவென படத்தை நகர்த்தியிருக்கிறார். இந்த பரபரதான் படத்தின் வெற்றியே.   

Netflix கில் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது, படத்தை பற்றி எழுதும் முன்பு, யாரவது எழுதி இருகிறார்களா என்று தேடும் போது வெப்துனியாவில் இந்த பதிவு கிட்டியது. அதை தன் இங்கு பகிர்ந்து உள்ளேன்.

நன்றி - வெப்துனியா 


Saturday, May 24, 2014

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!

ரஜினி என்கிற மாபெரும் நடிகரை மட்டுமே நம்பி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இது போன்ற புது  தொழில்நுட்பங்களை (ஆரோ 3D)கமல் மட்டுமே அறிமுக படுத்தி வந்துள்ளார். ரஜினிக்கு இதுவரை ஒரு புது தொழில்நுட்பத்தில் முதல் முறையாக அறிமுக படுத்த வாய்ப்பு இல்லாமலே போனது, என்னை போன்ற ரஜினி வெறியர்களுக்கு பெரிய குறையாகவே இருந்து வந்தது. இனி மேல் அந்த கவலை இல்லை. 3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்க்கே அறிமுக படுத்தியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் என்று காலரை தூக்கி விட்டு சொல்லி கொள்ளலாம்.


  2009ம் ஆண்டில் வெளியான "அவதார்" மற்றும் 2011ம் ஆண்டில் வெளியான "அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்" போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட படம் தான் கோச்சடையான். "அவதார்" "டின் டின்" படங்களை விட கோச்சடையானை உருவாக்குவதில் சிக்கல் அதிகம். பாண்டோரா கிரகத்தில் வாழும் "நாவியையோ" அல்லது டின் டின் கதாபாத்திரத்தையோ யாரும் பார்த்தது இல்லை, அதன் உடல் மொழியை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். ஆனால் ரஜினி எப்படி நடப்பார், எப்படி ஓடுவார், எப்படி சிரிப்பார் என்று , ரஜினியின் அணைத்து உடல்மொழியும் தமிழ் மக்களுக்கு அத்துபடி. இந்த சவாலை திறம்பட சாமாளித்து, நிஜ ரஜினியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள் பட குழுவினர்கள். நல்ல தொழில்நுட்பத்துடன் சிறந்த கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, உலக தரமான இசை என்று அணைத்தும் சரியான விகிதத்தில் சேர்ந்து விஷுவல் விருந்து படைத்தது இருக்கும் சரித்திர சாகசம் தான் கோச்சடையான்.


 ஒற்றை வரியில் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை என்று சொல்லி விட முடியாது. விறு விறு திரைக்கதை முலம் இந்த சாதாரண கதையை அற்புதமாய் செதுக்கி மற்றுமொரு ரஜினி மாஸ் படத்தை நமக்கு வழங்கி உள்ளார் செளந்தர்யா மற்றும் கே.ஸ் ரவிக்குமார் கூட்டணி. இது போன்ற விறுவிறுப்பான திரைகதை கடந்த இருபது ஆண்டுகளில் ரஜினிக்கு அமையவில்லை என்றே நான் சொல்வேன். இது போன்ற எக்ஸ்பிரஸ் வேக கதை கடைசியாய் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் வழங்கி ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தினார். அதன் பிறகு இப்பொழுது கோச்சடையான். பரம திருப்தி.
   
  கோட்டையபட்டினம் என்கிற தேசத்து மன்னன் ரிஷிகோடங்கன் (நாசர்). அந்த நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான் (ரஜினி). இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் நல்லவன் யாருக்கும் அஞ்சா மாபெரும் வீரன். அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது  அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். சதி செய்து கோச்சடையான்னை அழித்தும் விடுகிறார். தன் தந்தையை கொன்ற நாசரை எப்படி ராணா பழிக்கு பழி வாங்குகிறார் என்பதை எக்ஸ்பிரஸ் வேக திரைகதையில் விடை சொல்லி இருக்கிறார் கே.ஸ்.

  
முதல் இருபது நிமிடங்கள் படத்தோடு ஓட்டுவது கொஞ்சம் சிரமம் தான். மோஷன் காப்ச்சர் டெக்னாலஜிக்கு நம் கண்கள் பழக எடுத்து கொள்ளும் நேரம் தான் இது. கண்கள் பழகியவுடன் திரைக்கதை வேகம் எடுக்கிறது. சிறிது கூட தொய்வு ஏற்படாமல் இறுதி வரை டெம்போவை தக்க வைத்த இயக்குனர் செளந்தர்யாவிருக்கு பெரிய சபாஷ். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று கேரக்டரில் ரஜினி கலக்குகிறார். இவரது உடல் மொழி, ஸ்டைல்கள் படத்திற்கு பெரிய பலம். கோச்சடையான் ரஜினி ஆடும் சிவதாண்டவம் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள், தத்துவங்களாக அனல் கக்குகின்றன. தீபிகா படுகோனேவை முதல் பாதியில் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற நடிகர்கள் தேர்வும் கன கச்சிதம். நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. மிகவும் நன்றாக செய்து உள்ளார். ஷோபனா, ருக்மணி, சண்முகராஜன் ஆகியோரின் கேரக்டர்களும் அம்சமாக உள்ளது. 
  
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து – வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!

கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!
My Rating : 8.8


Thursday, April 17, 2014

மேஜிக் நம்பர் 272 -ஐ பிஜேபியால் தொட முடியுமா ..?? கருத்துக்கணிப்பு முடிவுகள்.


இந்திய திருநாட்டின் தேர்தல் களம் சுடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. மேஜிக் நம்பரான 272 ஐ தொட்டு வெற்றி கனியை பறிக்க போவது, மோடி தலைமையிலான பி.ஜே.பி (NDA) கூட்டணியா இல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் (UPA) கூட்டணியா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஜெயிக்க போவது மோடி தலைமையிலான அணி தான் என்பதை பெருன்பான்மையான மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் பி.ஜே.பி கூட்டணியால் 272 ஐ தாண்ட முடியுமா இல்லையா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம். 

தேசிய கட்சிகளில் பி.ஜே.பி மட்டுமே பிரதம மந்திரி வேட்பாளரை தேர்தல் தொடங்குவதருக்கு 8 மாதங்களுக்கு முன்பே அறிவித்து, தேர்தல் வேளைகளில் இறங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி தன் பிரதம மந்திரி வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காதருக்கு தோல்வி பயம் தான் காரணம்  என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.  "இது வரை காங்கிரஸ் பிரதம மந்திரி வேட்பாளரை அறிவித்ததே இல்லை" என்ற விளக்கத்தை சப்பைக்கட்டு போல் தான் பார்க்க முடிகிறது. இது காங்கிரஸ் காட்சிக்கு விழுந்த முதல் அடி.


அடுத்த அதி முக்கிய அடி, காங்கிரஸுக்கு கூட்டணி அமைப்பதில் விழுந்தது. இந்தியாவில் தேசிய கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்றாலும், அதற்கு மாநில கட்சிகளின் சப்போர்ட் நிச்சியம் தேவை. யாரும் எதிர்பாரா வண்ணம் எந்த மாநில காட்சியும் காங்கிரசை சீந்தாமல் போனது யாரும் எதிர்பாராது. 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி மேஜிக் நம்பரான 272 ஐ தாண்டுவதற்க்கு பெரிதும் உதவி செய்தது கூட்டணி கட்சிகள் தான். மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் (19 MP), மு.காவின் தி.மு,க (18 MP) மற்றும் ஒய்எஸ்ஆர் ஒன்று பட்ட ஆந்திராவில் பெற்று தந்த 33 MP சீட் தான் காங்கிரஸ் (UPA) கூட்டணி இரண்டாவது முறை ஆட்சியில் அமர உதவி புரிந்தது. இந்த முறை (2014) மேற்கு வங்காளத்தில் மம்தா கை கழுவி விட, மு.கா இதயத்தில் கூட இடம் இல்லை என்று கையை விரிக்க. பெரிதும் நம்பிய தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதியும் நம்பிக்கை துரோகம் செய்து விட, வேறு வழியே இல்லாமல் அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக் தள மற்றும் சரத் பாவரின் NCP (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மட்டுமே நம்பி களத்தில் இறங்கி உள்ளது. 

2009 ஆண்டு பி.ஜே.பி சொதப்ப முக்கிய காரணம் கூட்டணி தான். சென்ற முறை நிதிஷ்குமாரின் JD(U) தவிர்த்து பலமான கட்சிகள் எதுவும் NDA) கூட்டணியில் சேர வில்லை. சென்ற முறை செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த முறை வழுவான கூட்டணி மற்றும் மிக மிக வழுவான பிரதம மந்திரி வேட்பாளரை கொண்டு களம் இறங்கி உள்ளது. வழுவான வேட்பாளார் மட்டும் போதாது என்று, மிக ஆக்ரோஷமாக பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. "இந்தியா ஒளிர்கிறது" "இந்தியா தேய்கிறது" போன்ற காமெடி விளம்பரங்களை விட்டு, அந்த அந்த மாநிலங்களில் உள்ள லோக்கல் பிரச்சனைகளை முன்னிடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகையை பிரச்சாரத்தின் பலனை பி.ஜே.பி நிச்சியமாக MP சீட்ஸ் முலம் அறுவடை செய்யும் என்றே நான் நம்புகிறேன். தேர்தலில் பி.ஜே.பியின் கூட்டணியின் இலக்கான 272 ஐ தொட உதவி புரியும் முக்கிய மாநிலங்களை பற்றி இப்பொழுது பார்போம்.

பீகார் & ஜார்கண்ட் (54) சீட்ஸ்:
     17 வருடம் கூட்டணியில் இருந்த JD(U)வை மோடி பிரதம மந்திரி வேட்பாளார்  பிரச்சனையில் கழட்டி விட்டு, ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியுடன் சேர்ந்து தேர்தல் களம் காணுகிறது. பாஸ்வான் நம்ம ஊர் ராமதாஸ் போல், எந்த கட்சி வெற்றி பெறுவது  போல் தெரிந்தாலும், போய் ஒட்டி கொள்வார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர், இன்று பி.ஜே.பியுடன் ஒட்டி கொண்டு உள்ளார். இவருக்கு மாநிலத்தில் பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. பத்து வருடம் ஆட்சியில் இருக்கும் நிதிஷ்குமாரின் JD(U)மீது ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி ஓட்டுகளையும், மோடி அலையும் சேர்த்து 
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:

பீகார் - 40
ஜார்கண்ட்-14
குஜராத் (26) சீட்ஸ்:
     என்ன தான் குஜராத் அளவுக்கு அதிகமாக காம்ப்ளான் குடித்து வளர்ந்து விட்டது, இல்லை அது இன்னும் முளைக்கவே இல்லை என்று இணைய போராளிகள் கூப்பாடு போட்டாலும், அந்த ஊர் மக்களுக்கு மோடி தான் பிடித்து இருக்கிறது, மீண்டும் மீண்டும் பி.ஜே.பியை தான் அவர்கள் தங்களை ஆளா இதுவரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள், இனிமேலும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்ல. சென்ற லோக்சபா தேர்தலில் 11 சீட்களை இழந்து சிறிய தேகத்தை சந்தித்தாலும். தங்கள் ஊர் முதல்வர் பிரதம மந்திரி வேட்பாளார் என்பதாலும் இந்த முறை சிறு குறை கூட சொல்ல முடியாத படி முழு வெற்றியை தேடி தருவார்கள் என்று நம்புவோம் ஆக. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:


  
கர்நாடகா (26) சீட்ஸ்:
  பிஜேபி இந்த முறை நல்ல சரிவை  சந்திக்க போகும் மாநிலம் இது தான் என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. சென்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவை இழந்து, தோல்வியை தழுவிய காரணத்தால், இந்த முறை அவரை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்து உள்ளார்கள். எடியூரப்பாவின் வருகை மற்றும் மோடி அலை எத்தனை தொகுதியை பெற்று தரும் என்று பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும். கருத்துக்கணிப்பு விபரம்:

கர்நாடகா (26)


மத்திய பிரதேசம் & சத்தீஸ்கர் (40) சீட்ஸ்:
  பிஜேபி ஆளும் மாநிலங்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் விஸ்வரூப வெற்றியை பிஜேபிக்கு தேடி தந்த மாநிலங்கள். சக்திவாய்ந்த லோக்கல் தலைவர்கள் செளகான் & ராமன் சிங் இந்த முறையும் ஏமாற்றாமல் நல்ல வெற்றியை தேடி தருவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.
MP
CHAT
  
  மகாராஷ்டிரா: (48) சீட்ஸ்:
  இரண்டாவது பெரிய மாநிலம். நீண்ட காலமாய் ஆண்டு வரும் ஆளும் காங்கிரஸ் எதிரான உணர்வுகளை ஓட்டாக மற்ற மோடி மற்றும் சிவசேனா அரும்பாடு படுகிறது. மும்பை மற்றும் புனேவில் ஆம் ஆத்மி சிறிது ஓட்டை பிரிக்கலாம். கொங்கன் மற்றும் விதர்பாவில் சிவசேனா மற்றும் பிஜேபி  முறையே நன்றாக செய்வார்கள் என்று நம்புகிறேன். கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதயே சொல்கிறது.

மகாராஷ்டிரா-48
  ராஜஸ்தான்:  (25) சீட்ஸ்:

 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜேபி கிளீன் ஸ்வீப் செய்த மாநிலம். சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் மிக பெரிய சீட் வித்தியாசம் இருக்கும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது.



 மேலே உள்ள மொத்த தொகுதிகளை வைத்து பார்க்கும் போது பிஜேபி கூட்டணி 140/219 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்கலாம். மேஜிக் நம்பரான 272 டைதொடுவார்களா இல்லையா என்பதையும் உ.பி,மேற்கு வங்கம்,  தமிழ்நாடு பற்றிய விரிவான பார்வையை அடுத்து பகுதியில் பார்போம்.


Monday, February 24, 2014

பிரம்மன் (2014) - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!

சினிமாவின்  மீது தீராத காதலில் வாழும் ஒருவன், தன் சிறு வயது லட்சியத்தின் விளைவாக பழைய தியேட்டர் ஒன்றை லீஸுக்கு எடுத்து படங்களை ஒட்டி வருகிறான். தன் தியேட்டர் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து எப்படி அதனை எப்படி மீட்கிறான் என்பது தான் பிரம்மன் கதை சுருக்கம். 

90 களில் பி.வாசு தாலி செண்டிமெண்டை மையமாக வைத்து படங்களை எடுத்து தள்ளினார். அதில் முதன்மையானது "சின்ன தம்பி". தாலியின் அனாடமியை தமிழ் மக்களுக்கு புரிய வைத்த புரட்சி படம். சின்ன தம்பியில் ஆரம்பித்து பத்தினி வரை தாலி மையபடுத்தி காவியங்களை படைத்தார் வாசு. திராவிட கழக போர் வாளாக, அடுத்து தி.மு.க தலைவியாக குஷ்பு தற்போது வளர்ந்து இருபதருக்கு முக்கிய காரணம் வாசுவின் தாலி செண்டிமெண்ட் படங்கள் தான் என்றால் அது மிகையாகாது.

தாலியின் காப்பிரைட்ஸ் எப்படி வாசு குத்தகைக்கு எடுத்து வைத்து இருந்தாரோ, அதே போல் நட்பு செண்டிமெண்டை சசி குமார் மொத்தமாக வாங்கி வைத்து இருக்கிறார். அவர் நினைப்பும் சரி தான். 90 களில் தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் பெருன்பான்மையானவர்கள் தாய்குலங்கள். தற்போது காசு செலவு செய்து தியேட்டருக்கு வருபவர்கள் அனைவருக்கு இளைஞர்களே. அவர்களை கவர நட்பு செண்டிமெண்டடை செலக்ட் செய்தது  ஓகே தான். ஆனால்  எதை பரிமாறினாலும் அளவோடும் சுவையோடும் பரிமாற  வேண்டும், ஆனால்  அதுவே ஓவர் டோஸ் ஆகி விட்டால், கண்டிப்பாய் நம் மக்கள் துப்பி விடுவார்கள். அப்படி பட்ட ஓவர் டோஸ் படம் தான் பிரம்மன்.


படத்தின் முதல் காட்சியில் இயக்குனருக்கு சினிமாவின் மீது இருக்கும் பிரியம் நமக்கு புரிந்து விடுகிறது. இரண்டு சிறுவர்கள் தங்கள் ஊரில் இருக்கும் தியேட்டரில் இருந்து ரீல் பெட்டியைக் திருடி கொண்டு போய் நண்பர்களுக்குப் படம் காட்டும் காட்சி நம்மை நிமிர்ந்து உட்கார செய்து விடும். அந்த இரண்டு சிறுவர்களின் ஒருவன் சிவா (சசிகுமார்) வளர்ந்து மற்றொரு நண்பனுடன் (சந்தானம்) சேர்ந்து அதே ஊரில் உள்ள மாடர்ன் தியேட்டரை லீஸுக்கு எடுத்து நடத்துகிறான். தியேட்டர் பிஸினெஸ் சரியாக போகாத காரனத்தினால உதாவாக்கரை, தண்டசோறு என்று வீட்டில் உள்ளவர்களால் அன்போடு அழைக்க படுகிறார். இன்ட்ரோ முடிஞ்சு பேரு வாங்கியாச்சு, அடுத்து என்ன லவ் போர்ஷன் தானே. வழக்கம் போல் ஹீரோயின் வருகிறார், பார்க்கிறார் காதலில் விழுகிறார். படு திராபையான காதல் போர்ஷன். 

லவ் போர்ஷன் முடிஞ்சு போச்சு, அடுத்து என்ன பிரச்னை தானே.. சீக்கிரம் என்ன பிரச்சனையின்னு சொல்லுங்கபான்னு நீங்க கேட்கிறது புரியுது. ஒரு பிரச்சினை மட்டும் வந்தா அதை ஈசியா சமாளிச்சு ஜெய்ச்சி காட்டிடுவார் நம்ம ஹீரோ. அதனால் ரெண்டு பெரிய பிரச்னை. தியேட்டர் தொடர்ந்து நடத்த 5 லட்சம் பணம் தேவை படுகிறது. காதலிலும் இரு வீட்டார் எதிர்ப்பின் முலம் பிரச்னை வர. எல்லா பிரச்சனைக்கும் தீர்வு தேடி சென்னை புறப்படுகிறார். வந்தோரை வாழ வைக்கும் சென்னை, சசியை வாழ வைத்ததா இல்லையா என்பது தான் மீதி கதை.


ஒரு வெற்றிகரமான இயக்குநர், நடிகர் என்கிற அந்தஸ்தை சசி சும்மா அடைந்து விடவில்லை. சசியின் இந்த வெற்றிக்கு பின்பு அவரின் உழைப்பு, மற்றும் அர்ப்பணிப்பு ஒளிந்து இருக்கிறது. யாருடைய பின் புலமும் இல்லாமல் வளர்ந்து சசி, இனி மேல் கதை தேர்விலும் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. 

அவரின் இந்த கதாபாத்திரம் ஏனோ மனதில் ஒட்டாமல் சசி முகம் போலவே இறுக்கமாக இருக்கிறது. முதல் பாதில் ஒரு திரையரங்கை நடத்தவே கஷ்டப்படும் சசி இரண்டாம் பாதியில் சென்னை சென்று ஒரு திரைபடத்தை இயக்கும் அளவுக்கு போய் மெர்சல் ஆகுகிறார். சசி இயக்குனர் ஆகும் காட்சிகள் இவர்கள் முதல் காட்சியில் ஓட்டும் சன் டிவி சீரியல்களை ஞாபக படுத்துகிறது. 

படத்தை வழக்கம் போல் காப்பாற்றுவது நம்ம சந்தானம் தான். மனிதர் ஒன்-லைனர் காமெடி முலம் கைதட்டல் அள்ளுகிறார். முதல் பாதியில் சந்தானம் காப்ற்றினால், இரண்டாம் பாதியில் சூரி காமெடி என்கிற பெயரில் ஏதோ ஏதோ பேசுகிறார். சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது. கதாநாயகி லாவண்யா பார்க்க அழகாக இருக்கிறார். பாடல் காட்சிகளில் நன்றாக ஆடவும் செய்கிறார். நடிப்பில் இன்னும் தேறவேண்டும்.


இசை தேவிஸ்ரீ. பாடல்கள் எதுவுமே மனதில் தங்கவில்லை. பின்னணி இசை அதோ கதி தான். இயக்குனர் சாக்ரடீஸ் கமலிடம் திரை பாடம் கற்றவர். கமலின் பள்ளியில் இருந்து வந்த யாரும் இது வரை ஜெயித்தது இல்லை, அந்த ராசி இதிலும் தொடர்கிரறது. சாக்ரடீஸ் வித்தியாசமான பொழுதுபோக்கு படத்தை தர முயற்சித்திருக்கிறார். இருந்தாலும் திரைக்கதையில் இன்னும் நன்றாக செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. சசி இந்த படத்துடன் நட்பு சென்டிமென்ட்டுக்கு முழுக்கு போட்டால் நலம்.

பிரம்மன் - போதும் சசி, இத்தோட நிறுத்திருங்க !!
My Rating: 6.5/10.


Friday, February 21, 2014

ராஜீவ் கொலைக்கு நியாயம் கேட்டு புழுவாய் துடிக்கும் வஞ்சமில்லா உள்ளங்களே !!! ஐந்து நிமிடம் ஒதுக்கி இதைப் படியுங்கள். !!


பேரறிவாளன் பேட்டரி தேவைக்கான காரணத்தை அறிந்தே தான்  வாங்கித் தந்தாராம்,ஆனால் தெரியாது என பொய் சொல்கின்றாராம்,வயதான தாயை வைத்து மக்களிடம் இரக்கம் சம்பாதிக்கிறாராம். அதனால் அவரை அவசியம் தூக்கில் போட வேண்டுமாம்,மீண்டும் அறிவு ஜீவிகள் பிதற்ற ஆரம்பித்து விட்டனர்,ஆனால் அவர்கள் கீழ்கண்டவற்றை வசதியாக மறந்துவிடுவார்கள், கண்ணை திறந்து கொண்டே தூங்குவார்கள்,

இவர்களுக்கு யாராவது தூக்கில் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், 1800களில் சதி என்னும் உடன்கட்டையை சுற்றி நின்று வேடிக்கை பார்த்தார்களே?!!! மூடர்கள் ,அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?ஃப்ரெஞ்சுப் புரட்சியின் போது ஜில்லெட்டினில் வீழ்த்தப்பட்ட அறிஞர்கள் , எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள்,அவர்கள் மனைவி குழந்தைகள்  தலைகளை சதுக்கத்தில் கூடி குரூரமாக வேடிக்கை பார்த்தார்களே பெர்வெர்ட்டுகள், அவர்களுக்கும் இவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் உள்ளதா?!!! நாட்டில் எது எப்படி நடந்தாலும் இந்த 3 பேரை அவசியம் தூக்கில் போட வேண்டும்.


ராஜிவ் கொலை வழக்கை,சரியாகவே விசாரிக்கவில்லை என்பது தானே நடந்த உண்மை,ராஜீவ் கொலை குறித்து பேரறிவாளனுக்கு மட்டும் தான் முன்கூட்டியே தெரியுமா? ஏன் அப்போதைய ஜனதா தள சென்ட்ரல் மினிஸ்டர் சுப்பிரமணியசாமிக்கு தெரியாதா? ஆர்டிஎக்ஸ் பெல்ட்பாம் பூஜை செய்து ஆசியளித்த அரசியல் ப்ரோக்கர் கம் போலிச் சாமியார் சந்திராசாமிக்கு தெரியாதா?


ஒரு முக்கிய அரசியல்வாதி டில்லியில் இருந்து வந்தால் எப்படி ஜால்ரா அடிப்பார்கள்? லோக்கல் அல்லக்கைகள்,ஆனால் அன்று அங்கே ஸ்ரீபெரும்புதூரில் 1991மே21 நடந்தது என்ன?ஒரு முன்னாள் பிரதமர்,அதுவும் புனிதப்பசு குடும்பத்தின் ஒரே வாரிசு,அவர் மனது வைத்தால் கிடைக்கும் ராஜயோகம்,இரவு 10-00 மணி வேறு , கொடிய கத்திரி வெயில் புழுக்கம் வேறு,திசைக்கொன்றாக விசிறிக்கொண்டே இருக்க மாட்டார்கள் அல்லக்கைகள்?

 போலீசாரின் பாதுகாப்பை விட அல்லக்கைகள் பாதுகாப்பு ஒரு அரசியல்வாதிக்கு எத்தனை அவசியம்?,தலைவரின்  கடைக்கண் பார்வைக்கு எப்படி ஏங்குவார்கள் அல்லக்கைகள். யாராவது அந்தண்டை இந்தண்டை அவரை விட்டு விலகுவார்களா? பிரியாணி இலைக்கு அடித்துக்கொள்ளும் நாய் போல அல்லவா?  நான் நீ என போட்டி போட்டு அவரை சுற்றி ஈயாக மொய்த்து எடுப்பார்கள்?


ஆனால் நடந்த உண்மை நிலவரம் என்ன? அங்கே பெங்களூர் நெடுஞ்சாலையில்,இரவு 10மணி வாக்கில் புதிதாய் இந்திரா சிலையை திறக்கும் வரை உடன் இருந்துவிட்டு ராஜிவ் மேடையை நோக்கி நடக்கையில் கமுக்கமாக, லாவகமாக, கழண்ட விஐபிக்கள் மூப்பனார்,ஜெயந்தி நடராஜன்,வாழப்பாடியார்,இத்யாதி, அவர்கள் யாருக்குமே தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று? அன்று கூட்டத்துக்கு வராமல் போன கூட்டணித் தலைவி அம்மா, அவருக்கு தெரியாதா? ராஜிவ் சாகப்போகிறார் என்று?

அப்படி அவர்களுக்கு அந்த உண்மை தெரியாமல் போயிருந்தால், இந்திய பொதுவுடமைக் கட்சி தலைவரான தா.பாண்டியன் போல அவர்களும் குண்டுவெடிப்பில் சிக்கி பலத்த காயமடைந்திருப்பார்கள் அல்லவா?. பொதுவுடமைக் கட்சியின் கூட்டணித்தலைவர் ராஜீவ் பேசுவதை மொழிபெயர்க்க உடன் வந்து பலத்த காயமடைகிறார்,ஆனால் ராஜீவின் கட்சியைச் சேந்த முத்த தலைவர்களுக்கு எந்த கிறலுமே இல்லை.நகைப்புக்கிடமாக இல்லை?


ஹரிபாபு எடுத்த புகைப்படத்தில் தற்கொலைப் போராளி தணுவின் நெற்றியில் பொட்டு கிடையாது,ஆனால் இறந்து போன  தணுவின் நெற்றியில் இருக்கும் பொட்டு எப்படி வந்தது? அந்த துக்க கரமான நேரத்திலும்,மரண ஓலத்துக்கிடையே ,நேரம் ஒதுக்கி பொட்டு வைத்த மேக்கப் ஆர்டிஸ்ட் யார்?[குற்றத்தை இழைத்தவர்களை  தமிழ் இந்து கொலையாளியாக சித்தரிக்க நடந்த வேலை என்று தெரியவில்லையா?]


கொலைக்கான சூத்திரதாரி ஒற்றைக்கண் சிவராசன்  விடுதலைப்புலிகள் குழுவை சேர்ந்தவன் என்று சுப்ரமணியஸ்வாமி பரப்பிய அவதூறின் ரீதியிலேயே குற்றப்பத்திரிக்கை தயாரிக்கப்பட்டன, சிவராசனின் சாயல் தமிழனுக்கு உரிய சாயலே அல்ல.சிங்களனுக்கு உரிய தோற்றம் கொண்டவன் சிவராசன்.அவன் படத்தை உற்றுப் பார்த்தால் ராஜபக்சேவின் சிங்கள் தோற்றம் நன்கு புலப்படும்,சிவராசன் விடுதலைப் புலிகள் குழுவை சேர்ந்தவன் என்பதற்காக சிபிஐ முன்வைக்கும் வலுவான ஆதாரம் தான் என்ன?சிவராசனுக்கும் சந்திராசாமிக்கும் சுப்பிரமணியஸ்வாமிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு தான் என்ன?இதை குறித்து வாக்குமூலம் கொடுத்த 26ஆம் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த பெங்களூர் ஜெயராம் ரங்கநாத்தின் முக்கிய சாட்சியத்தை நீர்த்துப் போகச் செய்ததன் மர்மம் தான் என்ன?


இன்னொன்றையும் நினைவில் கொள்ளுங்கள்,குண்டு வெடிக்கப்போவது தெரியாமல் அன்று ஒற்றைக்சிவராசனால்  தினக்கூலி பேசி பஸ்ஸில் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட லோக்கல் போட்டோக்ராப்பர் ஹரிபாபு போடோக்களாக எடுத்துத் தள்ளியியபடியிருந்தார், கடைசி ஐந்து நிமிடம் முன் சிவராசன், நளினி எல்லோருமே அகன்றும் ஹரிபாபுவுக்கு இது தெரிவிக்கப்படவில்லை, அதனால் அவர் மிகவும் பரிதாபமாக பலியானார், அதே போன்றே பேரறிவாளனுக்கும் ராஜீவ் கொலைக்கான சதி தெரியாமல் இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறதா?!!! இல்லையா?!!!


ஏன் திருச்சி வேலுச்சாமியின் மனுவின் ரீதியில் சிபிஐ வழக்கை விசாரிக்கவில்லை? சந்திராசாமிக்கு ஏன் அப்படி ஒரு விஐபி அந்தஸ்து? வேண்டுமென்றே சுப்பிரமணியசாமி+சந்திராசாமியை ஏன் தப்பவிட்டனர்? அவர்களை ராஜீவ் மீது விசுவாசம் கொண்ட காங்கிரசார் கூட எதுவும் செய்யவில்லையே? ஏன் அந்த பயம்?


 சரி ,மே 2009 சுப்ரீம் கோர்ட்டு சந்திராசாமியின் மீதான வெளிநாட்டு பயணத்தடையை ஏன் திடீரென விலக்கிக்கொண்டது?அவருக்கு ஜவாப்தாரி கையெழுத்து போட்டது யார்?  2009 மே மாதமே,போபால் கொலைகாரன்,வாரன் ஆண்டர்சன் போல நாட்டை விட்டு தப்பி ஓடிய சந்திராசாமி  இப்போது எங்கே இருக்கிறார்? அது யாரைக் கேட்டால் தெரியும்? தகவல் அறியும் சட்டத்தில் கேட்டால் தெரியுமா?!!!


ராஜீவுடன் சேர்த்து 14 பேர் பலியானர் என அரசின் கணக்கு சொல்கிறது, ராஜீவாவது இலங்கையிலும் ,கிழக்கு தில்லியிலும் விதைத்ததற்கு அறுவடை செய்தார் எனலாம், ஆனால் அந்த அப்பாவிகள்  13 பேர் செய்த பாவம் என்ன?அவர்களுக்காக வேண்டியேனும் இவ்வழக்கின் உண்மையான குற்றவாளிகளை விசாரித்து தண்டனை தரக்கூடாதா?


இன்னும் ஒரு விஷயத்தை தயவு செய்து யோசியுங்கள், விடுதலைப் புலிகள் (LTTE)  இயக்கம் போன்றே சுமார் 40க்கும் மேற்பட்ட போராட்டக் குழுக்கள் தனி தமிழீழம் வேண்டி துப்பாக்கியுடனும் சயனைட் குப்பியுடனும் போராடி வந்தன,அவற்றை சாம,பேத,தண்டம் ஆகிய மூன்று நெறிமுறைகளையும் பிரயோகித்து ஒரே குடைக்குள் கொண்டு வந்தவர் மேதகு [ஒரே] புரட்சித்தலைவர் பிரபாகரன்.இவர் சேகுவாரேவையும் மிஞ்சும் நெஞ்சுரம் கொண்ட வீரர் என்றால் மிகையில்லை.


இந்த 40க்கும் மேற்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த எல்லோருக்கும் ஏன் சிங்களர்களுக்கும் கூட ராஜிவ் அனுப்பிய அமைதிப்படை மீதும் ராஜிவ் மீதும் அளவு கடந்த வெறுப்பு இருந்தது, அதில் எஞ்சிய வீரர்கள் யாரேனும் கூட ராஜீவ் படுகொலை என்னும் அகில உலக சதிக்கு துணை போயிருக்க வாய்ப்பிருக்கிறதா? இல்லையா? ஒரே கல்லில் ராஜீவையும் வீழ்த்தி ஆறாத பழியையும் பிரபாகரன் மீது சுமத்தி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்திருக்கலாமா? இல்லையா?!!!




இந்த திருச்சி வேலுச்சாமி சூர்யகதிருக்கு தந்த முக்கியமான பேட்டியை அவசியம் படியுங்கள்
இன்று மின்னஞ்சலில் பரபரப்பாக அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் செய்தி ரஜீவ் படுகொலை அதிரும் உண்மைகள் என்ற செய்தியாகும். இந்த மின்னஞ்சல் அப்படியே இங்கே தரப்படுகிறது.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.


உண்மையில் அந்தக் கொடூரம் யாரால் நடத்தப்பட்டது? என்பது பற்றி இன்றுவரை தெளிவான பதில் இல்லை. இருபது வருடங்களாக புதிது புதிதாக தகவல்களும், புத்தகங்களும் வெளியாகியபடியே இருக்கின்றன.

உண்மையில் நடந்தது என்ன? நடப்பவை என்ன? என்ற சந்தேகங்களோடு ராஜீவ்காந்தி படுகொலை குறித்து ஜெயின் கமிஷனில் நேர் நின்று பல உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமியை சந்தித்தோம்..

என்ன நோக்கத்திற்காக ஜெயின் கமிஷன் சென்றீர்கள்?

1991- மே 21ம் தேதி இரவு ராஜீவ் படுகொலை நடக்கிறது. அன்று இரவு பத்து மணிக்கு நான் டெல்லியில் இருந்த சுப்ரமணியன் சுவாமியை தொடர்பு கொண்டேன். அப்போது நான் ஜனதா கட்சியில் இருந்தேன். தேர்தல் பிரசார உச்சகட்ட நேரம். அடுத்த நாள் மதுரையில் நடக்க இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவர் வரவேண்டியிருந்தது. அது பற்றி பேசுவதற்காக இரவு 10.25 மணிக்கு தொடர்பு கொண்டேன். எடுத்த எடுப்பிலேயே ‘‘என்ன ராஜீவ்காந்தி செத்துட்டாரு. அதைத்தானே சொல்ல வரே… தெரியுமே.. என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது தகவல் தொடர்பு வசதி ஏதும் இல்லை. பதட்டமடைந்த நான், திருச்சியில் உள்ள உளவுத்துறை அதிகாரிகளிடம் தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளக் கேட்டேன். ‘அப்படி ஏதும் தெரியவில்லையே’ என்றார்கள். அந்த நேரத்திற்கெல்லாம் ராஜீவ்காந்தி இறந்தாரா இல்லையா என்பதையே உறுதிப்படுத்த முடியவில்லை. இரவு 10.10 க்கு குண்டு வெடிக்கிறது. பெரும் புகை மூட்டம். கூச்சல்.. குழப்பம்.. கொஞ்ச நேரம் கழித்து ஜெயந்தி நடராஜன்தான் தனியே கிடந்த ராஜீவ் காலை பார்க்கிறார். மூப்பனாரிடம் சொல்லி கத்துகிறார். அவர் வந்து மற்ற சடலங்களுக்கு இடையே தேடுகிறார். கடைசியில் ராஜீவின் எல்லா பாகத்தையும் பார்த்து உறுதிப்படுத்தவே அரை மணி நேரம் ஆனது என்று அடுத்த நாள் மாலை நாளேட்டிற்கு பேட்டி கொடுத்தார். ஆக 10.40 மணிக்குதான் படுகொலையான தகவலை உறுதிப்படுத்த முடிந்தது.

அப்படியிருக்கும்போது சுப்ரமணிய சுவாமிக்கு மட்டும் எப்படி முன்பாகவே தெரியும்? யார் சொன்னார்கள்? முதன்முதலாக அவர்தான் மீடியாவிற்கு ‘விடுதலைப்புலிகள்தான் இந்த படுகொலையை செய்தார்கள்’ என்று செய்தி தருகிறார். அடுத்த நாள்தான் விசாரணையே தொடங்குகிறது. திடீரென்று புலிகள் மீது ஏன் பழி போட வேண்டும்? இதெல்லாம் என்னை சந்தேகிக்க வைத்தது. அது மட்டுமின்றி அந்த படுகொலை சம்பவத்திற்கு முன்னும் பின்னுமாக பார்த்தால் சுவாமியின் நடவடிக்கைகளில் பல சந்தேகம். மர்மம். அதிர்ச்சி. இதுவெல்லாமும்தான் என்னை ஜெயின் கமிஷனுக்கு போக வைத்தது.’’

சுப்பிரமணியன் சுவாமி மேல் சந்தேகித்து மனு கொடுத்ததை ஏற்றுக் கொண்டார்களா? அந்த அனுபவங்கள் பற்றி சொல்லுங்கள்..

நான் எதிர்த்து நிற்பது சாதாரண ஆட்களை அல்ல என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், துணிந்து ஜெயின் கமிஷன் முன்பு நின்றேன். எனது மனுவை வாங்கிப் பார்த்த கமிஷனின் செகரட்டரி மனோகர் லால் என்னை மேலும் கீழுமாக பார்த்தார். படித்துவிட்டு நிமிர்ந்தவர் முகத்தில் கடுகடுப்பு. ‘சுப்ரமணியன் சுவாமி மீதா குற்றம் சொல்கீறீர்கள். சந்தேகிக்கிறீர்கள்?’ என்றார். ‘ஆமாம்’ என்றேன். அந்த மனுவை அப்படியே டேபிள்மீது போட்டுவிட்டு, ‘நாளை வாருங்கள்.. பார்க்கலாம்’ என்றார். என்னுடைய மனுவை ஏற்கமாட்டர்கள் என்று எனக்கு சந்தேகம்.

பெரிய மன உளைச்சல். என்னுடைய பாதுகாப்புக் காரணம் கருதி, சாதாரணமான ஓட்டல்களில்.. வேறு பெயரில் தங்கினேன். அந்த நேரத்தில்தான் மூத்த காங்கிரஸ் எம்.பியான ரஜினி ரஞ்சன் சாகு என்னை சந்திப்பதற்காக தேடி அலைந்திருக்கிறார். இவர் சோனியாவின் குடும்பத்திற்கு நெருக்கமானவர். இது பற்றி எனது தஞ்சை நண்பர் என்னிடம் சொன்னார்.

நானே ரஜினி ரஞ்சன் வீட்டிற்கு நேராக சென்றேன். ‘உங்களை சந்திக்க வேண்டும் என்று சோனியாஜி வீட்டில் தேடுகிறார்கள்’ என்றார். பிறகு, அங்கிருந்து ரஜினி ரஞ்சனுடன் சோனியாவின் வீட்டிற்கு சென்றேன். ‘மேடம் இல்லை’ என்று என் பெயரைச் சொன்னதும் பதட்டமாய் சொன்னார்கள். ஏமாற்றத்தோடு அடுத்த நாள் காலையில் வருவதாக சொல்லி திரும்பிவிட்டேன்.’’

அதன் பிறகு சோனியா காந்தியை சந்தித்தீர்களா?

இதுவரை எந்த ஊடகத்திற்கும் சொல்லாத செய்தியை உங்களிடம் கூறுகிறேன். அடுத்த நாள் நான் சோனியாவை சந்தித்தேன். அந்த வீடே ஒருவித நிசப்தமாக இருந்தது. இப்போதும் அங்கே இருக்கும் மாதவன், பிள்ளை என்ற சோனியாவின் உதவியாளர்கள் என்னை உள்ளே அழைத்துச் சென்றார்கள். ஜெயின் கமிஷனில் நான் அபிடவிட் தாக்கல் செய்யப் போவதைப்பற்றி கேட்டார்கள். படுகொலைக்கான சந்தேகம் யார் மீது? அதற்கான பின்னணி? வேறு பல சந்தேகம்? என்று ஒவ்வொன்றையும் கேட்டார்கள். மாதவனும், பிள்ளையும்தான் நான் பேசியதை சோனியாவிற்கு மொழி பெயர்த்தார்கள். நான் பேசப் பேச பென்சிலால் குறிப்பெடுத்துக்கொண்டே இருந்தார். டேபிளில் இருந்த டேப் ரிக்கார்டரும் பதிவாகிக் கொண்டிருந்தது.

மூன்று மணி நேர சந்திப்புக்குப் பின், ‘இதில் உங்களுக்கு என்ன ஆர்வம்? கட்சியிடம் இருந்து ஏதாவது எதிர்பார்க்கிறீர்களா? எதிர்பார்ப்பு ஏதுமில்லாமல் இதை நீங்கள் ஏன் செய்ய வேண்டும்?’ என்றெல்லாம் கேட்டார். ‘எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உண்மை வெளிவந்தால் போதும்.’ என்பதை விளக்கினேன்.

வாசல் வரை வந்துவிட்டு, மிகவும் தயங்கியபடியே அவரைப் பார்த்தேன். ‘உங்களுக்கு என்ன உதவி வேண்டும் என்றாலும் தயங்காமல் கேளுங்கள்’ என்றார்கள். ‘என் முயற்சி எல்லாம் வீணாகிவிடுமோ என்ற அச்சமாக இருக்கிறது. நேற்று மனு கொடுத்த போதே கமிஷனின் செகரட்டரி ஒரு மாதிரியாகத்தான் பார்த்தார். அந்த மனு ஏற்கப்பட்டால்தான் நான் என் தரப்பு கேள்விகளை எழுப்ப முடியும். பல உண்மைகளை வெளிகொண்டுவர முடியும். அதற்கு ஏதாவது நீங்கள் உதவ முடியுமா?’ என்றேன்.

என்றைக்கு உங்கள் மனு ஏற்பு விசாரணை வருகிறது?’ என்று கேட்டார். நான் தேதியைச் சொன்னேன். குறித்துக்கொண்டு ‘சரி போய் வாருங்கள்’ என்றார். சட்டென்று என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அங்கே இருந்த டைரியில் ஒரு தாளை கிழித்து பென்சிலால் அந்த வீட்டில் இருந்த ஐந்து தொலைபேசி நம்பரை எழுதி, ‘எப்போது வேண்டுமானாலும், எங்கிருந்தாலும் சரி. எந்தவிமான அவசரம் என்றாலும், உதவி என்றாலும் கேளுங்கள்’ என்று கூறியபடியே அந்த தாளை நீட்டினார். வாங்கி வைத்துகொண்டேன்.

அதோடு சரி. அதன் பிறகு நான் அவரை சந்திக்கவே இல்லை. இருபது ஆண்டுகள் ஓடிவிட்டது. அவர்களிடம் உதவி வேண்டிதான் அல்லது ஏதாவது பதவியை வேண்டிதான் நான் இந்த காரியத்தை செய்தேன் என்று தவறாக நினைத்துவிடக்கூடாது. அந்த ஒரே காரணத்திற்காக தொலைபேசியில்கூட பேசாமல் விட்டுவிட்டேன்.’’

சோனியாவிடம் என்ன பேசினீர்கள் என்பதை சொல்லவில்லையே? அதன்பிறகு டெல்லியில் என்ன நடந்தது?

அதை எந்த காலத்திலும் சொல்ல மாட்டேன். அது நாகரீகமாக இருக்காது. ஆனால், அதன் பிறகு என்ன மாதிரியான உதவி கிடைத்தது என்பதையும் சொல்ல வேண்டும். என்னுடைய மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா? என்ற குழப்பம் வந்த நாளில் திடீரென்று பார்த்தால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது. அதிரடிப்படை போலீசாரின் பதட்டம். கருப்பு பூனை பாதுகாப்பு வீரர்கள் சூழ பிரியங்கா உள்ளே வந்துகொண்டிருந்தார். வந்தவர் அமைதியாக உட்கார்ந்துகொண்டார். என் மனு மீதான விசாரணை வந்தது.

நான் என்னுடைய காரணங்களை சொன்னேன். ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதோடு சரி. பிரியங்கா என்னை பார்த்து சிரித்தபடியே கிளம்பிவிட்டார். எனக்கு செய்த ஒரே உதவி அதுதான்.

பிறகு, நான் சுப்ரமணியன் சுவாமியை குறுக்கு விசாரணை செய்த மூன்று நாட்கள் பிரியங்கா காந்தி மீண்டும் நேரில் வந்திருந்தார். அந்த மூன்று நாட்களும் நடப்பவற்றை குறிப்பெடுத்து கொண்டிருந்தார். புறப்படும்போது என்னை பார்த்து சிரித்தபடியே போவார்.’’

சுப்ரமணியன் சுவாமியிடம் நடந்த அந்த குறுக்கு விசாரணை எப்படி அமைந்தது?

ராஜீவ் படுகொலை உங்களுக்கு மட்டுமே எப்படி முன் கூட்டியே தெரிந்தது.? கொலை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று எதை வைத்து சொன்னீர்கள்? லண்டனில் இருந்து புலிகள் சார்பாக அறிக்கை கொடுத்த கிட்டு ‘கொலைக்கு காரணம் புலிகள் இயக்கம் இல்லை’ என்ற போது நீங்கள் விடு தலைப்புலிகள்தான் காரணம் என மீடியாவிற்கு செய்தி கொடுக்கக் காரணம் என்ன? என்றெல்லாம் கேட்டேன். சுப்பிரமணியன்சாமியோ ‘எனக்கு இலங்கையில் இருந்து தகவல் வந்தது.’ என்றார்.

சம்பவ இடத்தில் இருந்த அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. தமிழக காவல்துறை உறுதி யாக சொல்லவில்லை. மத்திய அரசும் உறுதியாக தகவலை பெறவில்லை. அப்படியிருக்கும்போது இலங் கைக்கு தெரிகிறதென்றால் யார் அந்த நபர்?‘ என்றேன். திருதிருவென முழித்தார். அதே போன்று ராஜீவ் படுகொலை நாளான மே- 21 க்கு அடுத்த நாள் சுவாமிக்கு மதுரையில் ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. மாலை நாளேடுகளில் பெரிய விளம்பரம் எல்லாம் கொடுத்திருந்தார்கள்.

மதுரை பொதுக்கூட்டத் துக்கு நீங்கள் வருவதற்கு விமானத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட் எங்கே?’ என்று கேட்டதும் அவருக்கு வியர்த்து கொட்ட தொடங்கியது. அது தேர்தல் காலம். விமான டிக்கெட் எல்லாமே முன்பதிவு செய்யப்பட்டிருக்கும். சுவாமி அப்படி ஒரு விமான டிக்கெட்டை பதிவு செய்யவே இல்லை. காரணம், ராஜீவ் படுகொலை திட்டம் அவருக்கு தெரிந்திருக்கிறது. அசம்பாவிதம் நடக்கப் போகிறது. எதற்கு போகவேண்டும்? என நினைத்திருக்கிறார்.

அது மட்டுமல்ல. மே-21 -க்கு முன்பாக தமிழக பிரசாரத்தில்தான் இருந்தார் சுவாமி. நான்தான் அவருக்கு மொழிபெயர்ப்பாளர். அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. படுகொலைக்கு முதல் நாள் 20 -ம் தேதி சேலத்தில் தங்கியிருந்தோம். ‘கட்சி செலவுக்கு பணம் இன்னும் வரவில்லையே?’ என்று நிர்வாகிகள் கேட்டார்கள். அதற்கு சுவாமி ‘தேர்தல் நடந்தால் பார்த்துக்கொள்ளலாம். என்ன அவசரம்?‘ என்று சொன்னார். அதைப் பற்றிக் கேட்டும் பதில் இல்லை.

அதைவிட முக்கியம், அன்று இரவு ஒரு மணிக்கு சேலம் ஆத்தூரில் கூட்டம். முடிந்தவுடன் அவசர வேலை, டெல்லிக்கு போக வேண்டும் என்று சென்னைக்கு பறந்தார். இது திடீரென்று நடந்தது. அந்த நேரத்திற்கு விமானம் இல்லையே என்றபோது பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் என காரில் பறந்தார். அவருக்கு பின்னால் வந்த நிர்வாகிகளின் கார் அச்சிரப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கியது. முன்னாள் எம்.எல்.ஏ குருமூர்த்தி சேலம் மாவட்ட ரத்தினவேல், காஞ்சிபுரம் ஏகாம்பரம் ஆகியோருக்கு படுகாயம். சுவாமி அதைக்கூட பொருட்படுத்தாமலே சென்னைக்கு ஓடினார்.

இதைப்பற்றி கேட்பதற்கு நான் டெல்லிக்கு போன் செய்தேன். காலை ஃபிளைட்டில் சுவாமி சென்றிருந்தால் ஒரு ஒன்பது மணிக்குள்ளாக வீட்டில் இருக்க வேண்டும். அதை மனதில் வைத்து பேசினேன். சுவாமியின் மனைவிக்கு என்னை நன்கு தெரியும். அவரது குடும்பத்தில் ஒருவராக பார்த்தார். ‘என்ன வேலுசாமி.. அவர் அங்கதானே இருக்கிறார்.. இங்கு கேட்கிறீர்களே?’ என்றார்.
எனக்கு குழப்பம். உடனே அவரது அலுவலகத்திற்கு பேசினேன். அங்கிருந்தும் அதே பதில்தான். சென்னையில்தான் இருக்கிறாரோ என்று சென்னைக்கு பேசினேன். சுவாமிக்கு வேண்டிய நண்பர்களிடம் எல்லாம் பேசினேன். எல்லோரும் அவர் டெல்லியில் இருப்பதாக சொன்னார்கள். சுவாமி அப்போது மத்திய அமைச்சராக இருந்தார்.

தினசரி ‘மூவ்மெண்ட் ரிப்போர்ட் பைல்’ என்பது அமைச்சர்களுக்கு கட்டாயம் உண்டு. அது எங்கே என்று கேட்டால் தொலைந்துவிட்டது என்றார். என்னவென்றால் அன்றைய தினம் சுவாமி டெல்லிக்கே போகவில்லை. சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனை அருகில் இருக்கும் ஒரு ஓட்டலில் சந்திராசாமி பதிவு ஏதும் செய்யாமல் ரகசியமாக தங்கியிருந்தார். அவரோடுதான் சுவாமியும் இருந்துள்ளார். அங்கிருந்து காரிலேயே பெங்களூருவுக்கு சென்றிருக்கிறார்கள்.

ராஜீவ் படுகொலைக்கு ஒரு நாள் முன்பு அந்த இரண்டு சாமிகளின் நடவடிக்கை மர்மாகவே இருந்தது. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் சுப்பிரமணியன் சுவாமியிடம் பதிலே இல்லை. அவரது சட்டையெல்லாம் நனைந்து, வேர்வை கொட்டியது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதி அங்கே. பிரியங்கா என்னையும் பார்க்கிறார். சாமியையும் பார்க்கிறார். பிரியங்காவின் முகத்தில் அப்படி ஒரு ஆவேசம். கோபம். நீதிபதி ஜெயின் சுவாமியையே உற்று பார்த்தபடி கோர்ட் கலைகிறது என்றுகூட சொல்லாமல் எழுந்து போய்விட்டார்.

ராஜீவ் படுகொலையை செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயன், ரகோத்தமன் கூறியிருக்கிறார்களே?

அதை மறுக்கின்றேன். என்னுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் ஜெயின் கமிஷன், ‘சந்திராசாமி, சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் போதிய ஒத்துழைப்பை தரவில்லை’ என்றது. அதை ஏற்று பல்முனைநோக்கு புலன் விசாரணை குழு போட்டார்கள். அந்த குழு சுப்ரமணியன் சுவாமியையும், சந்திராசுவாமியையும் 20 வருடங்கள் ஓடியும் இன்றுவரை அழைத்து விசாரிக்கவே இல்லை.

சுப்ரமணியன் சுவாமியுடன் எப்போதும் ஒரு பெண் இருப்பார். சுவாமி போகும் பொதுக் கூட்டங்களில் அந்த பெண்ணும் இருப்பார். அவர் ஈழத்தைச் சேர்ந்த புலிகளின் எதிர்ப்பு குழுவை சேர்ந்தவர். அந்தப் பெண் ராஜீவ் படுகொலைக்கு பிறகு சுவாமியுடன் இல்லை. எங்கு போனார் என்றே யாருக்கும் தெரியவில்லை. அதற்கான புகைப்பட ஆதாரத்தை நான் பல்முனைநோக்கு புலன் விசாரனை குழுவிடம் கொடுத்தேன்.

சி.பி.ஐ அதிகாரி கார்த்திகேயனும், சி.பி.ஐ. விசாரணை அதிகாரியான ரகோத்தமனும் எழுதி வெளியிட்ட புத்தகம் எல்லாம் சி.பி.ஐ தயாரித்த ஆவணங்களை வைத்துதான் எழுதப்பட்டது. அது அவர்களே உருவாக்கியது.

என்னுடைய வாக்குமூலம், என்னுடைய சந்தேகம். அதற்கான ஆதாரங்கள் எல்லாம் சொல்வது ‘இந்த படுகொலையை விடுதலை புலிகள் செய்யவில்லை’. அந்தளவிற்கு அது முட்டாள்தனமான இயக்கமும் அல்ல. அதை செய்தது வேறு ஒரு போராளி குழு. அந்த குழுவுக்குதான் வெளிநாட்டு சதி தொடர்பு இருக்கிறது. அவர்களை இங்கே வழிநடத்தியது எல்லாம் இரண்டு சாமிகளும்தான் என்பதே என் கருத்து!

நன்றி – சூரியகதிர்


Friday, January 10, 2014

வீரம் (2014) - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ் !!

ஜில்லா முடித்த கையோடு வீரம் ஹாலில் நுழைந்தோம். ஜில்லா ஹேங்ஓவரில் இருந்து வெளி வந்து வீரத்தில் நுழைய சிறது நேரம் பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் லா லா லா இயக்குனர் விக்ரமன், மாற்றும் அக்ஷன் இயக்குனர் தரணி படத்தை ஒரே மூச்சில் பார்த்த அனுபவத்தை வழங்கியது வீரம். சாதாரன கதையை, சாரி கதையே இல்லாமல் கூட படத்தை பக்கா திரைக்கதை மூலம் சுவாரிசியமாய் குடுக்க முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.


கல்யாணமே வேண்டாம் என்று தன் தம்பிகளுடன் வாழும் விநாயகம் காதலில் விழுந்து அதில் ஜெயிப்பது தான் படத்தின் ஒன் லைனர். விநாயகம் (அஜித்) ஒட்டன்சத்திரம் மார்க்கட்டில் தன் நான்கு தம்பிகளுடன் வியாபாரம் செய்து வருகிறார். கல்யாணமே வேண்டாம் என்று வைராக்கியமாய் வாழ்ந்து வருகிறார். கல்யாணம் ஆகி பெண் ஒருத்தி வீடிற்குள் வந்தால் தம்பிகள் ஒற்றுமை குலைந்துவிடும் என்று நம்புகிறார். அதனால் தானும் கல்யாணம் பண்ண கூடாது, தன் தம்பிகளும் கல்யாணம் பண்ண கூடாது என்கிற எண்ணத்தில் உறுதியாய் இருக்கிறார். ஆனால் விநாயகத்தின் இரண்டு தம்பிகள் காதலில் விழ, அவர்கள் எப்படியாவது  விநாயகத்தின் மனதில் காதலை விதைத்து விட முயற்சி மேற்கொள்ளகிறார்கள். அதன் படி கோப்பெரும்தேவியை (தமன்னா) விநாயகத்துடன் முடிச்சு போட ப்ளான் செய்கிறார்கள்.

இவர்கள் காதல் சந்திக்கும் பிரச்சினை என்ன, அந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை செண்டிமெண்ட் மற்றும் அக்ஷன் காட்சிகளை சரியான விகிதத்தில் கலந்து கட்டி அடித்து உள்ளார் இயக்குனர். சால்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் நடையை (எடையை அல்ல) குறைத்து அசத்தி உள்ளார் அஜித். அக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் அளவுக்கு கோபத்தை காமித்து உள்ளார். ரிஸ்க் எடுத்து ட்ரைன் சண்டை காட்சியில் உயிரை துச்சமென மதித்து நடித்து உள்ளார். நடன புயல் பாக்கியராஜ், அளவுக்கு வர வில்லை என்றாலும், தன்னாலும் ஈடு குடுத்து டான்ஸ் ஆட முடியும் என்று நிருபித்து உள்ளார். முந்திய அஜித் படங்களில் டுயட் பாடல்கள் இல்லாமல் இருந்து பெரிய ஆறுதலாக இருந்தது. இதில் அஜித் ஆடும் நடனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. 


படத்தை ஒற்றை தூண் போல் தாங்குவதும் அஜித் தான். தமன்னாவுக்கு மாஸ் படங்களில் வரும் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் வெயிடான் ரோல். இவரை சுற்றி தான் மையின் கதை (!?) பின்ன பட்டு இருக்கும். இணையத்தில் அஜித் - தமன்னா ஸ்டில்ஸ் போட்டு அபியும் நானும் - 2 என்று  கலாய்த்து இருந்தார்கள். அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அஜித் - தமன்னா ஜோடி கொஞ்சம் உறுத்தவே செய்கிறது. 

படத்தின் மிக பெரிய பலம் முதல் பாதி சந்தானம் மற்றும் இரண்டாம் பாதி ராமையா தான். சந்தானம் மற்றும் அஜித்தின் தம்பிகள் பண்ணும் அளப்பறைக்கு தியேட்டரே அதிருகிறது.  வெகு நாட்கள்கழித்து சிரித்து மகிழ்ந்தது இதில் வரும் காமெடி எபிசோடுக்கு தான். இரண்டாம் பாதி லா லா லா செண்டிமெண்ட்க்கு நாசர் குடும்பம். இவர்கள் பண்ணும் செண்டிமெண்ட் டிராமா எரிச்சலை கூட்ட வில்ல என்பது பெரிய ஆறுதல். அஜித் எதன்னை பேரை வெட்டினார் என்பதை எண்ணுவது சிரமம். ஆனால் மருந்துக்கு கூட போலீஸ் வர வில்லை. 


இரண்டு வில்லன்கள். இருவருமே நன்றாக செய்து உள்ளார்கள். ஆனால் தெலுங்கு வாடை ஜாஸ்தி. தேவி ஸ்ரீ பிரசாத்தை இனிமேல் பிண்ணனி இசையமைக்க மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பாடல்கள் எதுவுமே மனதில் தங்க வில்லை. பிண்ணனி இசை தான் டெம்போவை குறைக்காமல் கதையை நகர்த்துகிறது. டூயட் பாடல்களை முன்று நிமிடங்களுக்கும் குறைவாக வைத்ததும் பெரிய ஆறுதல். அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். எண்பதுகளில் வந்த முரட்டுகாளை படம் போல் ரொம்ப சாதாரண கதையில் அக்ஷன், செண்டிமெண்ட், காமெடி ரொமான்ஸ் என்று எல்லா வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி ஜெயித்து இருக்கிறார் இயக்குனர்.

வீரம்  - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ்.

My Rating: 7.8/10.


ஜில்லா (2014) - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !!

சாண்டியாகோவில் வசிக்கும் எங்களுக்கு தமிழ் படங்கள் ரீலீஸ் ஆவதை வைத்து தான் பொங்கல் பண்டிகை நெருங்கி வந்து விட்டது என்கிற நினைப்பே வருகிறது. பொங்கல் போனஸாய் மாலை 6 மணி காட்சி ஜில்லாவும் இரவு 9 மணி காட்சி வீரம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. முதலில் "ஜில்லா" வின் பார்வை எப்படி என்று பார்போம். தலைவாவில் வாங்கிய சூடு இன்னும் ஆறாமல் இருந்த போதும், மோகன்லால் - விஜய் கூட்டணி, அதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பு என்றதுமே நான் சற்றே அதிகம் எதிர் பார்த்து விட்டேன். நல்ல விறுவிறுப்பாய் வந்து இருக்க வேண்டிய படம் இயக்குனரின் அனுபவமின்மையால் நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது.


போலீஸ்கார்களை வெறுக்கும் ரவுடி சந்தர்பவசத்தால் போலீஸ் ஆனால் என்ன ஆகும் என்பதே ஜில்லா ஒன் லைனர். ஷிவன் (மோகன்லால்) மதுரை ஆட்டி படைக்கும் பெரிய தாதா. அவரிடம் வேலை பார்க்கும் ஷக்தியின் (விஜய்) அப்பாவை போலீஸ் ஒருவன் கொன்றுவிடுகிறான். அதனால் போலீஸ் மீதும் காக்கி சட்டை மீதும் தீராத வெறுப்பில் ஷிவனின் வளர்ப்பு மகனாய் வளர்கிறார் ஷக்தி.  ஒரு சந்தர்பத்தில் தனக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் ஒரு ஆள் வேண்டுமென்று ஷிவா முடிவெடுக்க, போலீஸசை வெறுக்கும் ஷக்தி போலீஸ் (!!) ஆக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாய் வேலைக்கு சேரும் ஷக்தி, ஊரில் ஷிவா செய்யும் தப்புகளை கண்டும் காணமல் இருக்கிறார்.

ஒரு விபத்தில் நிறைய உயிர் இழப்புகளை பார்க்கும் ஷக்தி மனம் திருந்தி நல்ல போலீஸாய் மாறி ஷிவனின் ரவடி சாம்ராஜியத்தை எதிர்க்க புறபடுகிறார். நல்லவனாய் மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் லாலேட்டனை, விஜய் எப்படி திருத்துகிறார் என்பதை நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார் இயக்குனர். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மோகன்லால் தான். மனிதர் தாதா கதாபாத்திரத்தில் நின்று ஆடி உள்ளார். வாயில் சுருட்டுடன் "ஷிவன்னா யாரு தெரியுமான்னு" பஞ்ச் பேசும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். விஜயுடன் சவால் விடும் காட்சிகளிலும், வில்லத்தனம் காட்டும் காட்சிகளிலும் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிருபித்து இருக்கிறார். விஜய் - லாலேட்டனை காம்போ காட்சிகளில் விஜயை இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் அசல்டாய் தோற்கடித்து விடுகிறார். 


விஜய் படத்துக்கு படம் இளமையாய் ஆகி கொண்டே போகிறார். முந்திய படத்தை விட இன்னும் பிட்டாய் மற்றும் ஸ்மார்டாய் தெரிகிறார். நடிப்பு மற்றும் மானரிசத்தில் போக்கிரி ஸ்டைலை பாலோ செய்து உள்ளார். போக்கிரி படத்துக்கு செட் ஆனா அவரின் அசால்ட் மானரிசம் இந்த கதைக்கு நிச்சயம் செட் ஆகவில்லை. சீரியஸாய் வசனம் பேச வேண்டிய காட்சிகளில் வில்லுப்பாட்டு பாட்டுகாரன் போல் பல்லை கடித்து வாயில் முனுமுப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரை சொல்லி குற்றம் இல்லை, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். விஜய் செமையா ஸ்கோர் செய்யும் டான்ஸ் ஏரியாவில் இந்த முறையும் கலக்கி உள்ளார்.

காஜல் அகர்வால் மேக்அப் மேன்க்கு  சம்பள பாக்கி போல் தெரிகிறது. பார்பவர்களை பழி வாங்கி உள்ளார்கள். பார்பதற்க்கு கர்ண கொடூரமாய் இருக்கிறார். கதை சொல்லும் போதே உங்களுக்கு 4 சாங், அஞ்சு சீன் என்று சொல்லி தான் கால்ஷீட் வாங்குவார்கள் போல். ஒரு சீன் கூட எக்ஸ்ட்ரா இல்லை. ஹீரோ திருந்தும் காட்சியில் மட்டும் நடிக்க முயற்சி செய்து உள்ளார். மற்ற படி ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. காமெடிக்கு சூரி. என்ன சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது.


படத்தில் வேண்டிய அளவு ட்விஸ்ட் உள்ளது. வலுவான கதையும் இருக்கிறது. ஆனால் திரைகதையை சுவாரிசியமாய் கொண்டு செல்வதில் இயக்குனர் சறுக்கி விட்டார். ஹீரோவின் கெத்தை காட்ட வேண்டும் என்றால் 
வில்லன்னும் அதே அளவு கெத்துடன் இருக்க வேண்டும், இது மாஸ் சினிமாவின் எழுதபடாத விதி. ஆனால் இந்த படத்தில் வில்லன் யார் என்பதே கடைசி இருபது நிமிடத்தில் தான் தெரியவருகிறது. வில்லன் யார் என்கிற சஸ்பென்ஸ் தெரிந்தவுடன் வேகம் எடுப்பது போல் தெரிந்தாலும், அதன் பிறகு சப்பென்று முடிந்து விடுகிறது. இன்னொரு பெரிய குறை, லாஜிக் என்கிற வஸ்துவை நீங்கள் பூத கண்ணாடியை வைத்து தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. அத்தனை லாஜிக் மீறல்கள்.

இசை இமான், பாடல்கள் எல்லாமே அட்டகாசம், பாடல்கள் காட்சியமைப்பும் செம. பின்னணி இசை சில காட்சிகளில் காதை பதம் பார்த்தாலும், நிறைய காட்சிகளில் நன்றாக இருந்தது. நீசன் திரைகதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருந்தால் போக்கிரி பொங்கல் போல் வந்து இருக்கும். நல்ல நடிகர்கள், நல்ல கதை இருந்தும் சொதப்பியது இயக்குனர் மட்டுமே. 

ஜில்லா  - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !! 

My Rating: 6.9/10.